ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..
முன்னாள் பிரதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கின் வழக்கு விசாரணை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2,3ஆம் திகதிகளுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால், ஒத்திவைக்கப்பட்டது.
41.2 மில்லியன் ரூபாய் சொத்துக்களைச் சட்டவிரோதமாகச் சேர்த்துள்ளார் என பராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த’வுக்கு எதிராக, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த இந்த வழக்கு, இன்று(03) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கணினிச் சாட்சியங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு, தனியார் வங்கியொன்று தமக்கு அனுமதி வழங்கவில்லை எனவும் வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறும் பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, மன்றில் கோரினார்.
கணினிச் சாட்சியங்களை ஆராய்வது தொடர்பில் வங்கிக்கு உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஓகஸ்ட் மாதம் 2, 3ஆம் திகதிகளுக்கு ஒத்திவைத்தார்.
(rizmira)