வஸீம் தாஜூடீன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டமை குறித்து ராஜித ஒப்புதல்..?

வஸீம் தாஜூடீன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டமை குறித்து ராஜித ஒப்புதல்..?

பிரபல ரகர் வீரர் வஸீம் தாஜூடீன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

தாஜூடீனை யார் கொன்றார்கள் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது பற்றிய விடயங்கள் தமக்குத் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாஜூடீன் கொலை தொடர்பான தொலைபேசி உரையாடல்களும் தற்போது வெளியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கள்வர்களை பாதுகாக்கும் தரப்புக்கள் எதிர்வரும் காலங்களில் ஒன்றிணைந்து செயற்படும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

(rizmira)