சரண குணவர்தன நீதிமன்ற முன்னிலையில் குற்றத்தினை ஒப்புக்கொண்டார்..

சரண குணவர்தன நீதிமன்ற முன்னிலையில் குற்றத்தினை ஒப்புக்கொண்டார்..

அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் சரண குணவர்தன தம்முடைய சொத்து விவரங்களை முன்வைக்க தவறிய குற்றத்தினை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற முன்னிலையில் இன்று(06) ஒப்புக்கொண்டார்.

அவர் தலைவராக கடமையாற்றிய 2005 தொடக்கம் 2007 வரையிலான காலப்பகுதியில் சொத்து விவரங்களை முன்வைக்காத குற்றத்திற்காக சரண குணவர்தன மீது வழக்குத் தாக்கல் செய்யப்படிருந்தது.

பிழையினை ஒத்துக் கொண்டதை அடுத்து குறித்த வழக்கினை ஜூலை 20ம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
(rizmira)