ரங்கிரி தம்புள்ளை விஹாரைக்கு காலவரையறையின்றி பூட்டு..

ரங்கிரி தம்புள்ளை விஹாரைக்கு காலவரையறையின்றி பூட்டு..

ரங்கிரி தம்புள்ளை விஹாரை நேற்று(10) முதல் காலவரையறையின்றி
மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி அமைச்சினாலேயே குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், வரலாற்று முக்கியத்துவமிக்க ரங்கிரி தம்புள்ளை விஹாரையை நேற்று(10) முதல் மூடி வைப்பதற்கு கல்வி அமைச்சுக்கும் புராதன சொத்துக்களை பாதுகாப்பது தொடர்பிலான குழுவிற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் நேற்று முதல் மீளறிவிப்பு செய்யப்படுகின்ற வகையில் இந்த புராதன விஹாரையானது வெளிநாட்டிலிருந்து வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கும் கூட திறக்கப்படாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பூட்டப்பட்டிருக்கும் காலப்பகுதியில் இந்த விஹாரையினும் காணப்படுகின்ற சிதைவுக்குள்ளாகும் ஓவியங்கள் குறித்தும் விஹாரையினை மீளவும் சீர்திருத்தும் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது

 

(rizmira)