கொழும்பின் சில பகுதிகளில் 08 மணித்தியால நீர்வெட்டு..

கொழும்பின் சில பகுதிகளில் 08 மணித்தியால நீர்வெட்டு..

அத்தியவசியப் பராமரிப்புப் பணிகளுக்காக நாளை(20) கொழும்பின் சில பகுதிகளில் 08 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

தெஹிவளை – கல்கிசை மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, 20ம் திகதி இரவு 09.00 மணி முதல் மறுதினம்(21) அதிகாலை 05.00 மணிவரை குறித்த இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, சொய்சாபுர, அத்திடிய, கவுடான, பெபிலியான, பெல்லத்தோட, நெதிமாலை, களுபோவில, நுகேகொடை, கொகுவலை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் இக்காலப் பகுதியில் தடை செய்யப்படவுள்ளது.

அத்துடன், வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை உள்ளிட்ட தெற்கு கொழும்பிலும் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

(rizmira)