அரசியல் அமைப்பு பேரவையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி விலகல்..

அரசியல் அமைப்பு பேரவையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி விலகல்..

அரசியல் அமைப்பு பேரவையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி இன்று(19) முதல் உத்தியோகபூர்வமாக விலகிக் கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த தீர்மானம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட மூன்று பக்கத்தைக் கொண்ட கடிதமொன்று இன்று முற்பகல் 9.30க்கு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் அமைப்புப் பேரவையிலிருந்து விலகிக் கொள்ள அனுமதி வழங்குமாறு இதற்கு முன்னதாக சபாநாயகரிடம் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி கோரியிருந்தது. இந்தக் கோரிக்கைக்கு நேற்று(18) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அரசியல் அமைப்பு பேரவையில் நாடாளுமன்றின் 225 உறுப்பினர்களும் அங்கம் வகிக்க வேண்டும் என்ற சரத்து தமது தீர்மானத்தின் ஊடாக சவாலுக்கு உட்படுத்தப்படும் எனவும் தேசிய சுதந்திர முன்னணி மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

(rizmira)