எரிபொருள் பவுசர் விபத்தினால் நீர் விநியோகம்  தடை..

எரிபொருள் பவுசர் விபத்தினால் நீர் விநியோகம் தடை..

இரத்தினபுரி – பாணந்துறை பிரதான வீதியில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் பவுசரில் இருந்த எரிபொருள் களு கங்கையில்  கலந்துள்ளமையினால் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஹொரணை, றைகம, பண்டாரகம, வெள்மில்ல, மடபாத, கெஸ்பேவ,பொரலஸ்கமுவ, கடுபெத்த, பாணந்துறை, மொறட்டுவ, இங்கிரிய, கந்தானை மற்றும் பிலியந்தலை   உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.