இலங்கைக்கு எதிரான T-20 போட்டியிலிருந்து தவான் விலகல்..

இலங்கைக்கு எதிரான T-20 போட்டியிலிருந்து தவான் விலகல்..

இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷிகார் தவான் இலங்கைக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தவானின் தாயார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட் டுள்ள நிலையில், அவரைப் பார்ப்பதற்காக இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து பாதியில் வெளியேறி இந்தியா பயணமாகியுள்ளார் தவான்.

இலங்கைக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் தவான் விளையாடவில்லை. அதேபோல் நாளை மறுதினம்(06) நடை பெறவுள்ள T-20 ஆட்டத்தில் இருந்தும் தவான் விலகியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

 

(rizmira)