புதிய வரிச் சட்டமூலத்திற்கு அனைத்து நிறுவன சேவையாளர் சங்கம் கண்டனம்..
புதிய வரிச் சட்டமூலத்தின் ஊடாக ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) என்பவற்றை கொள்ளையிட இடம் தரப்போவதில்லை என
அனைத்து நிறுவன சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால், நேற்று(04) குறித்த சங்கத்தின் பிரதிநிதிகளால் இது தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் பொருட்டு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதன்போது கருத்து வெளியிட்ட போதே அனைத்து நிறுவன சேவையாளர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
(rizmira)