ஆரம்பித்தது தேர்தல் வன்முறை : தலதாவின் ஆதரவாளர் வெட்டிக் கொலை

ஆரம்பித்தது தேர்தல் வன்முறை : தலதாவின் ஆதரவாளர் வெட்டிக் கொலை

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  தலதா அத்துகோரளவின் ஆதரவாளர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

துஷார தேவாலேகம (வயது – 37) என்ற குறித்த நபர், இனந்தெரியாதோரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவமானது இரத்தினபுரி – தெய்யன்கேதால பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தலதாவின் தேர்தல் பிரசார நடவடிக்கைக்கு சென்றுகொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள், தலதாவின் ஆதரவாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். பின்னர், கடும் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.