கருணா அம்மானுக்கு எதிரான விசாரணை நிறைவுக்கு..

கருணா அம்மானுக்கு எதிரான விசாரணை நிறைவுக்கு..

ஜனாதிபதி செயலகத்திற்கு உரித்தான 09 கோடி ரூபா பெறுமதியான குண்டு துளைக்காத வாகனம் ஒன்றினை முறைகேடாக பயன்படுத்தியமை குறித்த சம்பவம் தொடர்பில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் ஆயுதப் பிரிவின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமாகிய விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் இற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவுக்கு வந்துள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இன்று(06) நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இதன்பிற்பாடு குறித்த வழக்கினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ம் திகதிக்கு மீளவும் எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க இன்று(06) உத்தரவிட்டுள்ளார்.

 

(rizmira)