வடகொரியாவுக்கு எரிபொருள் கொண்டு செல்வதை நிறுத்த ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா கோரிக்கை..

வடகொரியாவுக்கு எரிபொருள் கொண்டு செல்வதை நிறுத்த ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா கோரிக்கை..

வடகொரியாவுக்கு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் கொண்டு செல்வதை நிறுத்தல்  மற்றும்  புடவை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க கோரியும் ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா வரைவு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும் கண்டுகொள்ளாத வடகொரியா சமீப காலமாக அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது.

இந்த சோதனைகள் அமெரிக்காவை மீண்டும் ஆத்திரப்படுத்தியுள்ளதுடன் இதனால், வடகொரியா மீது கடுமையான தடைகளை விதித்து நெருக்கடி கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா ஒரு வரைவு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது.

பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களை வடகொரியாவுக்கு கொண்டு செல்லத்தடை, வடகொரியாவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் துணி உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை, அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் க்கு சொந்தமான சொத்துக்களை முடக்குவது மற்றும் அவர் பயணம் செய்வதற்கு தடை ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ஐ.நா பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் மற்றைய நாடுகளான சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை ஆதரித்து வாக்களிக்கும் பட்சத்தில் இந்த தீர்மானம் நிறைவேறும். அதேவேளை ஏதேனும் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தாலும் தீர்மானம் செயலற்றதாகிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வடகொரியாவின் எண்ணெய் தேவையை ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் பூர்த்தி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.