TNA இனது அறிக்கை அரசியல் யாப்பு வழிநடத்தல் குழு செயலகத்திடம் கையளிப்பு..

TNA இனது அறிக்கை அரசியல் யாப்பு வழிநடத்தல் குழு செயலகத்திடம் கையளிப்பு..

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உத்தேச அரசியல் யாப்பு சம்பந்தமான இடைக்கால வரைபோடு சேர்த்துக் கொள்ளப்படவுள்ள, பல்வேறு கட்சிகளின் நிலைப்பாடு சம்பந்தமான அறிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்களாகிய இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் கையொப்பத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனினால் குறித்த அறிக்கை நேரடியாக கையளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மறுதினமே (ஆகஸ்ட் 30) குறித்த ஆவணமானது அரசியல்யாப்பு வழிநடத்தல் குழு செயலகத்திற்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

குறித்த ஆவணம் கையளிக்கப்பட்ட நேர காலம் தொடர்பில் வெளிவரும் மாறுபட்ட நிலைமைகளை தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகபேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)