நாட்டின் சில பமாகாணங்களுக்கு இன்றும்(10) கன மழை..

நாட்டின் சில பமாகாணங்களுக்கு இன்றும்(10) கன மழை..

நாட்டின் சில பகுதிகளில் இன்றும்(10) கன மழை பெய்யும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வட மேல் மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்வதுடன் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் குறித்த திணைக்களம் இன்று(10) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்தத் தொடர்ச்சியான மழை காரணமாக பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அத்திணைக்களம் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

(rizmira)