முன்னாள் அமைச்சர் கெஹேலியவுக்கு பிணை..

முன்னாள் அமைச்சர் கெஹேலியவுக்கு பிணை..

முன்னாள் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னால் பணிப்பாளர் நாயகமான ஜயம்பத்தி பண்டார ஹீன்கெந்த ஆகியோர் தலா ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் இன்று(12) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கெஹெலிய ரம்புக்வெல ஊடக அமைச்சராக செயற்பட்டபோது, அவருக்கான 2 லட்சத்து 30 ஆயிரம் பெறுமதியான தொலைபேசி கட்டணம் அரச அச்சக கூட்டுத்தாபனத்தினால் செலுத்தப்பட்டமை தொடர்பில் அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த இந்த வழக்கு விசாரணை இன்று(12) கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற போதே மேற்குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

(rizmira)