டிக்கெட்டுக்கு 1 ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு உதவி: விஷால் அதிரடி அறிவிப்பு..

டிக்கெட்டுக்கு 1 ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு உதவி: விஷால் அதிரடி அறிவிப்பு..

விஷால் நடிப்பில் இன்று(14) வெளியாகும் துப்பறிவாளன் பட வசூலில் டிக்கெட்டுக்கு 1 ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு உதவி செய்ய இருப்பதாக அவர் அறிவித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பதவியேற்பு விழாவில் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் வசூலிக்கப்பட்டு விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று தமிழ் திரைப்படம் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்து இருந்தார்.

அதன்படி விஷால் தயாரித்து நடித்து வெளியாகும் ‘துப்பறிவாளன்’ படத்தின் திரையரங்கு வருமானத்தில் இருந்து ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 350-க்கும் அதிகமான தியேட்டர்களில் துப்பறிவாளன் திரையிடப்படுகின்றது. அதில் எத்தனை காட்சிகள் நடைபெறுகின்றதோ, அத்தனை காட்சிகளிலும் விற்கப்படும் டிக்கெட்டுகளில் இருந்து ஒரு ரூபாய் வசூலித்து கொடுக்கப்படும் என்று விஷால் அறிவித்துள்ளார்.