தௌஹீத் ஜமாஅத் அமைப்பினரின் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு..
மியன்மார் முஸ்லிம்களுக்கெதிராக நடாத்தப்படும் இனப்படுகொலைகளை கண்டித்து தௌஹீத் ஜமாஅத் அமைப்பினர் இன்று(14) ஏற்பாடு செய்த்திருந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று(14) 1மணியளவில் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேளையில் அதனை நிறுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த தடை உத்தரவு தொடர்பில் தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் எஸ்.எம்.அமீருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
(rizmira)