மீன்பிடித் துறையை மேம்படுத்த திட்டம்..

மீன்பிடித் துறையை மேம்படுத்த திட்டம்..

மீனவ சமூகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தல் மற்றும் மீன்பிடித் துறையை மேம்படுத்துவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

காலி மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று(17) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டளவில் மீன்பிடி உற்பத்திகள் மூலம் கூடுதலான வெளிநாட்டு வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கு திட்டம் வகுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு படகுகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான கடன் வசதிகளை பெற்றுக்கொடுக்கவும் வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.