ருமேனியாவில் தாக்கிய புயலில் 8 பேர் பலி..

ருமேனியாவில் தாக்கிய புயலில் 8 பேர் பலி..

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் நேற்று(17) கடும் புயல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் திமிசோயரா நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் கடும் காற்று வீசியுள்ளதாகவும் மழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 67 பேர் காயம் அடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது புயல் ருமேனியாவில் இருந்து உக்ரைன் நோக்கி செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.