சரண குணவர்தன மீண்டும் விளக்கமறியலில்..

சரண குணவர்தன மீண்டும் விளக்கமறியலில்..

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன எதிர்வரும் மாதம் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை முதன்மை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று(18) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அபிவிருத்தி லொத்தர் சபைக்குரிய கெப் ரக வாகனமொன்றை முறைகேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அன்றைய தினம் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியிருந்த நிலையில் , முன்னாள் பிரதி அமைச்சர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)