நாளை(20) நள்ளிரவு  முதல் புகையிரத தொழிற்சங்க கூட்டு வேலை நிறுத்தத்தில்..

நாளை(20) நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்க கூட்டு வேலை நிறுத்தத்தில்..

சம்பள நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமை காரணமாக நாளை(20) நள்ளிரவு முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டமானது திட்டமிட்டப்படி முன்னெடுக்கப்படும் என புகையிரத செயல்பாட்டு மேற்பார்வை உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளின் உரிய பதில் கிடைக்காததால் குறித்த இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாளை நள்ளிரவு முதல் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பமாகவுள்ளதாக குறித்த தொழிற்சங்க கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

 

(rizmira)