ஹெரோயினுடன் நபரொருவர் கைது
சுமார் 500 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரொருவர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஹெரோய்ன் போதைபொருளின் பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.