தெல்கமுவ ஓயாவில் அடித்து செல்லப்பட்ட எஞ்சிய இருவரதும் சடலங்கள் மீட்பு.. .
லக்கலை – தெல்கமுவ ஓயாவில் கடந்த சனிக்கிழமை(04) நீராடச் சென்ற நிலையில் காணாமல் போன, இரண்டு சிறுமிகளினதும் உடல்கள் இன்று(06) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தெல்கமுவ ஓயாவில் நீராடச் சென்ற 08பேர் காணமல் போன நிலையில், அவர்களில் 06 பேரின் சடலத்தை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நேற்று(05) மீட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
E – (rizmira)