இழப்பீடு  கிடைக்காதோர் அறிவிக்கவும்..

இழப்பீடு கிடைக்காதோர் அறிவிக்கவும்..

வெலிக்கடை சிறைசாலையில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாது இருந்தால் அறிவிக்குமாறு சிறைச்சாலை மறு சீரமைப்பு மற்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரையில் உயிரிழந்தவர்களுள்; 10 பேருக்கும் காயமடைந்த ஐவருக்குமாக நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைசாலையில் இடம் பெற்ற இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இறந்த கைதி ஒருவருக்காக 20 இலட்சம்ச ரூபாவும் காயமடைந்த ஒருவருக்கு 5 இலட்ச ரூபாவும் வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைவாக குறித்த இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

####