சூர்யாவுடன் இணைந்து நடிப்பேன் கார்த்தி நம்பிக்கை…

சூர்யாவுடன் இணைந்து நடிப்பேன் கார்த்தி நம்பிக்கை…

பொருத்தமான கதை அமைந்தால் சிங்கம் சூர்யாவுடன் இணைந்து நடிப்பேன் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

நடிகர் கார்த்தி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“சினிமாவில் கதைதான் முக்கியம். நல்ல கதையம்சம் உள்ள படங்களைத்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள். எனவே கதை தேர்வில் நான் கவனமாக இருக்கிறேன். நல்ல கதையாகவும் என் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும்படியும் பார்த்துக் கொள்கிறேன். பருத்தி வீரன் படத்தில் இருந்து ஒவ்வொரு கதையும் எனக்கு வித்தியாசமாகவே அமைந்துள்ளன.

தற்போது நான் நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படமும் வித்தியாசமான கதை. இதில் பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளேன்.

அதிரடி படமாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ தயாராகி உள்ளது. ‘ஆர்கானிக்’ உடைகளை இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளோம். சூர்யாவுடன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன். அதற்கான கதை அமைந்தால் இருவரும் சேர்ந்து நடிப்போம். நடிகர் சங்க கட்டிட நிதி திரட்டுவதற்காக நடிக்க இருந்த பட வேலைகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது என நடிகர் கார்த்தி இவ்வாறு கூறியுள்ளார்.