பெற்றோல் நெருக்கடி மீளவும்.. – அர்ஜுன எச்சரிக்கை…

பெற்றோல் நெருக்கடி மீளவும்.. – அர்ஜுன எச்சரிக்கை…

எரிபொருள் நிரப்பப்பட்ட கப்பல் வருவதற்கு தாமதம் ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என, பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாடு ஊடாக சிறந்த பாடத்தை கற்றுக் கொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

####