கொஸ்கொட  துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது..

கொஸ்கொட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது..

கொஸ்கொட – குருந்துகம்பியச, மெனிக்கம்மானய உள்ளிட்ட பிரதேசங்களுக்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

22 வயதான முக்கிய சந்தேக நபர் கொஸ்கொட, நானதொட்ட பிரசேத்தைச் சேர்ந்தவர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் இன்று(13) பலப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

###