ஈரான் – ஈராக் எல்லைப்பகுதியில் நிலநடுக்கம் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு…

ஈரான் – ஈராக் எல்லைப்பகுதியில் நிலநடுக்கம் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு…

ஈரான் – ஈராக் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைந்தது 300 கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் மற்றும் ஈராக் எல்லைப்பகுதியில் இன்று(13) அதிகாலை கடும் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

ஈராக்கின் ஹலாப்ஜா நகரில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் ஏற்பட்ட குறித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.3 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு இடம்பெற்ற 6.6 அளவிலான நில அதிர்வில் ஈராக்கின் தெற்கு பிராந்தியத்தில் சுமார் 26 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.