அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஐஸ்…
சில நாட்களுக்கு முன்பு மும்பையில் நடந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யாராய் கவர்ச்சி உடை அணிந்து வந்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
உலக அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஐஸ்வர்யாராய்,1997-ல் தமிழில் நடிகையாக அறிமுகம் ஆனார்.
இதையடுத்து இந்தி பட உலகில் முன்னணி நடிகையான ஐஸ்வர்யாராய் அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார். என்றாலும், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஐஸ்வர்யாராய்க்கு வயது 44. இந்த வயதிலும் படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இவர் பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வித விதமாக கவர்ச்சி உடை அணிந்து சென்று அனைவர் பார்வையும் தன் மீது விழச் செய்கிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாராய் கவர்ச்சி உடை அணிந்து கலந்து கொண்டு அசத்தியுள்ளார்.
இதில், அவர் அணிந்து இருந்த ‘டக்சிடோ’ என்ற அந்த நவீன கவுன் விலை ரூ.3 லட்சத்து 74 ஆயிரம். அலெக்சில் மாபிலே என்ற ஆடை வடிவமைப்பாளர் இதை வடிவமைத்து கொடுத்துள்ளார்.