யாழில் 05 தேர்தல் வன்முறைகள் பதிவு…

யாழில் 05 தேர்தல் வன்முறைகள் பதிவு…

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக யாழ் மாவட்டத்திற்குள் இடம்பெற்ற 05 சட்டவிரோத சம்பவங்கள் குறித்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் கூறியுள்ளார்.

சாவகச்சேரி, பருத்தித்துறை, உடுவில், சண்டிலிப்பாய் மற்றும் வேலனை ஆகிய பிரதேசங்களில் இருந்து குறித்த 05 முறைப்பாடுகளும் கிடைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பொது இடங்களில் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக மூன்று முறைப்பாடுகளும், அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோதமாக ஒரு கட்சி அலுவலகத்தில் நுழைதல் தொடர்பாகவும் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக மாவட்ட செயலாளர் கூறியுள்ளார், மேலும், யாழ். மாவட்டத்தில் வேறு தேர்தல் விதிமீறல்கள் குறித்து பதிவாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு அது சம்பந்தமாக விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.