பொதுமக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் விசேட அறிவிப்பு…

பொதுமக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் விசேட அறிவிப்பு…

வாக்காளர்களுக்கு கிடைத்துள்ள உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் என்பன தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுமாயின் அது குறித்து உடன் அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் எழுத்து மூலமாகவோவும், தொலைபேசி ஊடாகவும் கிராம சேவை அதிகாரிக்கோ அல்லது மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கோ அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும், உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்காளர் அட்டை தபால் மூலம் கிடைக்காதவர்கள் தமது பிரதேச தகவல் நிலையத்திற்குச் சென்று வினவுவதன் மூலம் அதனைப் பெற்றுக் கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

 

#rishma