மியான்மார் நாட்டு தலைவர் ஆங் சன் சூகி வீடு மீது குண்டு வீச்சு…

மியான்மார் நாட்டு தலைவர் ஆங் சன் சூகி வீடு மீது குண்டு வீச்சு…

மியான்மார் நாட்டில் வெளியுறவு மந்திரியாக இருக்கும் ஆங் சன் சூகி வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியான்மார் நாட்டு பெண் தலைவர். ஆங் சன் சூகி. ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் ஆளும் கட்சி தலைவராக இருக்கிறார். மியான்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதலால் ஆங் சன் சூகிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் இன்று யங்கூனில் ஆற்றங்கரையில் உள்ள ஆங் சன் சூகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து செல்வதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். பெட்ரோல் குண்டு வீசியவர்களை தேடி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.