சாதாரண தரப்பரீட்சையின் செய்முறை பரீட்சை எதிர்வரும் 20 இல் ஆரம்பம்…

சாதாரண தரப்பரீட்சையின் செய்முறை பரீட்சை எதிர்வரும் 20 இல் ஆரம்பம்…

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையளர் பி சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக செய்முறைப்பரீட்சைகள் 20ஆம் திகதி தொடக்கம் மார்ச் 3ஆம் திகதி வரையில் நடைபெறும் எனவும் பழைய பாடத்திட்டத்திற்கமைவாக செய்முறைப்பரீட்சைகள் மார்ச் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.