வாக்களிக்க ஏற்கத்தக்க அடையாள அட்டை தேவை – சில அட்டைகள் செல்லாது ..

வாக்களிக்க ஏற்கத்தக்க அடையாள அட்டை தேவை – சில அட்டைகள் செல்லாது ..

நாளைய(10) உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பின் போது புகைப்படத்துடனான அடையாளம் காணக்கூடிய ஏற்று கொள்ளப்பட்ட ஆள் அடையாள அட்டையின்றி எந்தவொரு நபருக்கும் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை என தேர்தல் ஆணைகுழு விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை , அங்கீகரிக்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப்பத்திரம் , உறுதி செய்யப்பட்ட செல்லுபடியான கடவுச்சீட்டு , அரச ஊழியர் அடையாள அட்டை , ஓய்வூதிய அடையாள அட்டை, மத குருமார்களுக்காக ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டை, தேர்தல் ஆணைக்குழுவினால் விநியோகிக்கப்படும் தற்கால அடையாள அட்டை ஆகியவற்றை மாத்திரமே வாக்களிப்பதற்கு பயன்படுத்த முடியும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் அடையாள அட்டை, சமாதான நீதவான்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை ,வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை உள்ளிட்ட எந்தவொரு அடையாள அட்டையும் வாக்களிப்புக்கு பயன்படுத்த முடியாது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

#rishma