அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரது பிணை கோரிக்கைக்கு சட்டமா அதிபர் எதிர்ப்பு…

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரது பிணை கோரிக்கைக்கு சட்டமா அதிபர் எதிர்ப்பு…

பேர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரது பிணை கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த 07 திகதி பிணை வழங்கக்கோரி கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த இருவரும் மனுதாக்கல் செய்தனர்.

குறித்த பிணை கோரிக்கை தொடர்பில் எழுத்து மூல விரிவுரையை இன்று(09)  தாக்கல் செய்யுமாறு நீதவான் சட்டமா அதிபரிக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் அவர்களுக்கு பிணை வழங்குவதற்கு எதிர்ப்பினை தெரிவித்து சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றிற்கு கடிதம் ஒன்றின் மூலம் இன்று(09) காரணங்களை அறிவித்துள்ளது.

அர்ஜுன் எலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

#rishma