இன்றும் பொலிஸ் பாதுகாப்பு…

இன்றும் பொலிஸ் பாதுகாப்பு…

உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு வீதி உலா, கலகம் அடக்கும் குழு மற்றும் வீதித் தடை பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பன இன்றும்(11) ​மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசெகர கூறியுள்ளார்.

நாடு பூராகவும் உள்ள 42 பொலிஸ் பிரிவுகளில் தேர்தல் கடமைகளுக்காக 65000 இற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சுமார் 5900 பேரும் விஷேட அதிரடிப் படையின் 4000 பேரும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.