முன்னாள் அமெரிக்க தூதுவர் ஜாலியவின் மனைவியை கைது செய்ய பிடியாணை…

முன்னாள் அமெரிக்க தூதுவர் ஜாலியவின் மனைவியை கைது செய்ய பிடியாணை…

அமெரிக்காவில் தூதுவர் காரியலயத்திற்காக கட்டிடம் ஒன்று கொள்வனவு செய்கையில், 132000 டொலர்கள் மோசடி செய்ததாக கூறப்படும் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கா தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தற்காலிகமாக வெளிநாடு செல்ல உள்ளதாக நீதிமன்றினால் அனுமதி கோருகையில், அவருக்கு பதிலாக பிணைதாரராக உள்ள அவரது மனைவி மற்றும் சகோதரியினை கைது செய்ய கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(16) பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற அனுமதியுடன் வெளிநாடு சென்ற பின்னர் ஜாலிய விக்கிரமசூரிய இதுவரை நாடு திரும்பாத நிலையில், அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 24ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

 

#rishma