குவைட் பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழப்பு…

குவைட் பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழப்பு…

குவைட்டில் ஏற்பட்ட பஸ் விபத்தில 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் நாட்டில் நேற்று(01) எண்ணெய் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களை அழைத்து கொண்டு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்த வேளையில், பர்கான் எண்ணெய் வயல் அருகே எதிர்பாராத விதமாக மற்றொரு பஸ் உடன் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 7 இந்தியர்கள், எகிப்து நாட்டை சேர்ந்த 5 பேர், பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.