நேபாள பிரஜையின் வயிற்றில் இருந்து 90 ஹெரோயின் வில்லைகள் மீட்பு…

நேபாள பிரஜையின் வயிற்றில் இருந்து 90 ஹெரோயின் வில்லைகள் மீட்பு…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நேபாள் பிரஜையினால் விழுங்கப்பட்டிருந்த 90 ஹெரோயின் வில்லைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஹெரோயின் வில்லைகளின் பெறுமதி சுமார் 90 இலட்சம் ரூபா என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டுபாயில் இருந்து வந்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளினால் கடந்த 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அவர் மாத்திரைகளை விழுங்கியிருப்பது தெரிய வந்துள்ளதுடன், அதனையடுத்து சந்தேகநபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.