ஜனாதிபதி குறித்து பொய்யான தகவல்களை வழங்கிய பிரபல ஜோதிடருக்கு எதிராக விசாரணை…

ஜனாதிபதி குறித்து பொய்யான தகவல்களை வழங்கிய பிரபல ஜோதிடருக்கு எதிராக விசாரணை…

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் ஜோதிட கணிப்புக்களை வெளியிட்ட பிரபல ஜோதிடரான விஜித ரோஹன விஜயமுனிக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்ற ஆலோசனைகள் கோர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து இன்று(03) இரகசியப் பொலிசாரினால் கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தியுள்ளதோடு, குறித்த விசாரணைகள் நிறைவுக்கு வந்துள்ளதாகவும், கொழும்பு – பிரதான நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் இன்று தெரிவித்துள்ளனர்.

குறித்த முறைப்பாடு மீண்டும் எதிர்வரும் ஜூலை மாதம் 09ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி 26 இல் மரணிப்பார், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராவார் மற்றும் கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாவார் என ஆருடம் கூறிய காணொளி ஒன்றை சமூகவலைத்தளத்தில் ஜோதிடரான விஜித் ரோஹன விஜயமுனி பதிவேற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#####