சீதுவை பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு பிணை…

சீதுவை பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு பிணை…

கட்டுநாயக்க பிரதேசத்தின் வர்த்தகர் ஒருவரிடம் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சீதுவை பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி இன்று(04) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது , 15 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணை அடிப்படையிலும் , 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணை அடிப்படையிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.