ஏப்ரல் 20 திகதி முதல் மீட்டர் கட்டாயமாகிறது…

ஏப்ரல் 20 திகதி முதல் மீட்டர் கட்டாயமாகிறது…

ஏப்ரல் மாதம் 20 திகதி முதல் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீட்டர் முறையினை கட்டாயப்படுத்தப்படுத்த அரசு தீர்மானித்துள்ளதாக சாலை பாதுகாப்புக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.

பயணிகள் பாதுகாப்பு மற்றும் முச்சக்கர வண்டியின் சேவையின் தரத்தினை உயர்த்துதல் போன்ற நோக்கங்களுக்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.

குறித்த கட்டண மீட்டர் முறைமை கடந்த முதலாம் திகதியில் இருந்து கட்டாயமாக்கப்பட்ட போதிலும், சாரதிகள் உள்ளிட்டோரின் கோரிக்கைக்கு அமைய காலக்கெடு வழங்கப்பட்டிருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

Rishma