தேயிலை இலைகளை இரவு 8.30 மணிக்கு முன்னதாக ஒப்படைக்கவும்…

தேயிலை இலைகளை இரவு 8.30 மணிக்கு முன்னதாக ஒப்படைக்கவும்…

தேயிலை தொழிற்சாலைகளுக்கு இரவு 8.30 மணிக்கு பின்னர் கிடைக்கப் பெறும் தேயிலை இலைகளை ஏற்காமல் இருக்க தீர்மானித்துள்ளதாகவும், அது குறித்த சுற்றுநிரூபம் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும் தேயிலை வாரிய ஆணையாளர் ஜயந்த எதிரிவீர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

உயர் தரமான தேயிலை உற்பத்திக்காக குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

எனினும், தேயிலை தொழிற்சாலைகளில் இருந்து சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்றும், அவ்வாறெனின் பொலிசாரின் உதவியுடன் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், தேயிலை வாரிய ஆணையாளர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

 

Rishma