மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு….

மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு….

மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம், எதிர்வரும் 20ம் திகதிக்குப் பின்னர் வரையறைக்கு உட்பட்ட வகையில் வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடுகே தெரிவித்துள்ளார்.

குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய யோசனைகளை, மின்சார சபையின் பொறியியலாளர்கள் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளனர்.

ஆனால் அதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படாமைக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பான கடிதம் நாளை(10) விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.