கடமைக்குத் திரும்ப பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு காலக்கெடு…

கடமைக்குத் திரும்ப பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு காலக்கெடு…

எதிர்வரும் 17ம் திகதிக்கு முன்னர் கடமைக்குத் திரும்புமாறு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அன்றைய தினத்திற்குள் கடமைக்குத் திரும்பாத தற்காலிக மாற்று ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்ட சகலரும் கடமையில் இருந்து நீங்கியதாக கருதப்படும் என உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளை அன்றைய தினத்திற்குள் நிரந்தர ஊழியர்கள் கடமைக்குத் திரும்பாது தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்களாயின்,
அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த காலத்துக்குறிய சம்பளத்தை வழங்காதிருக்க போவதாகவும் உயர்கல்வி அமைச்சு விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கடந்த பல நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கையைப் பரிசீலித்த அரசாங்கம் சம்பள அதிகரிப்பு பற்றிய தீர்மானங்களை எட்டியிருந்தது. இது பற்றி பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவிற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் உயர்கல்வி தெரிவித்துள்ளது.