ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு புதிய இலக்கம்…

ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களுக்கு புதிய இலக்கம்…

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யும் ஊழியர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உறுப்பினரின் இலக்கமாக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய உறுப்பினர் இலக்கம் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர தெரிவித்துள்ளார்.

இதற்காக தொழிலாளர் மற்றும் தொழில் வழங்குநர்களின் விபரங்கள் அடங்கிய விபரங்களுடன் திணைக்களத்தின் கணினியில் தரவுகளை புதுப்பிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பல நிறுவனங்களில் பணிபுரிந்துள்ள ஊழியர்களுக்கு பல இலக்கங்கள் காணப்படுகின்றன.

நிதியத்தின் பயன்களை பெற்றுக் கொள்ளும் போது இது சிக்கலாக அமைகின்றமை காரணமாக இந்த நெருக்கடியை தீர்க்கும் ஒரு நடவடிக்கையாக ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர் இலக்கமாக அவரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.