அகலக் கால் விரிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 7 தவிசாளர்களையும் 5 பிரதித் தவிசாளர்களையும் தனதாக்கியது.

அகலக் கால் விரிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 7 தவிசாளர்களையும் 5 பிரதித் தவிசாளர்களையும் தனதாக்கியது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோற்றம்பெற்று, குறுகிய காலமாக
இருந்த போதும் இக்குறுகிய காலத்தில் வடக்குக் கிழக்கில் நீண்ட காலமாக அரசியல் செய்துவரும் பாரம்பரிய தமிழ், முஸ்லிம் கட்சிகளை விஞ்சுமளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளதையே அக்கட்சி கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் பெற்ற அபார வெற்றி எடுத்துக் காட்டுகின்றது.

வடக்குக் கிழக்கு உட்பட நாட்டின் 15 மாவட்டங்களில் போட்டியிட்டு,
மொத்தமாக 166 உறுப்பினர்களை பெற்றுக் கொண்ட அகில இலங்கை
மக்கள் காங்கிரஸக்; கட்சி, 7 உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றி அதன்
தவிசாளர் பதவியைத் தனதாக்கிக்கொண்டதுடன் 5 உள்ளுராட்சி
சபைகளின் பிரதித் தவிசாளர் பதவிகளையும் பெற்று பங்காளிக் கட்சியாக பரிணமித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் பிரதேச சபை , சம்மாந்துறை பிரதேச
சபை, ஆகிய இரண்டு பிரதேச சபைகளையும் மட்டக்களப்பு மாவட்டதில்
கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடிப் பிரதேசசபை)

மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச சபை, முசலி பிரதேச சபை,
மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய மூன்று பிரதேச சபைகளையும்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்குப் பிரதேச சபையுடன்
மொத்தமாக ஏழு உள்ளுராட்சி சபைகளை தம் வசப்படுத்தியுள்ளது.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் பிரதேச சபை,
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேச சபை, குருநாகல்
மாவட்டத்தில் குளியாப்பிட்டி பிரதேச சபை வவுனியா மாவட்டத்தில்
வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபை, மன்னார் மாவட்டத்தில் முசலி
பிரதேச சபை அடங்கலான ஐந்து சபைகளின் பிரதித் தவிசாளர் பதவிகiயும் பெற்று முத்திரை பதித்துள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வவுனியா மாவட்டத்தில்
யானைச்சின்னத்தில் போட்டியிட்டு 20 உறுப்பினர்களையும், மன்னார்
மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு 34 உறுப்பினர்களையும், முல்லைத்தீவு மாவட்டத்தில் யானைச்சின்னத்தில் போட்டியிட்டு 12 உறுப்பினர்களையும், கொழும்பு மாவட்டத்தில் யானைச்சின்னத்தில் போட்டியிட்டு 2 உறுப்பினர்களையும், புத்தளம் மாவட்டத்தில் யானைச்சின்னத்தில் போட்டியிட்டு 12 உறுப்பினர்களையும், மட்டக்களப்பில் யானைச்சின்னத்தில் போட்டியிட்டு 14 உறுப்பினர்களையும், யாழில் ஒருவரையும், கிளிநொச்சியில் ஒருவரையும், அனுராதபுரத்தில் நால்வரையம்
பெற்றுக்கொண்டது.

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பாக மயில் சின்னத்தில் போட்டியிட்ட மக்கள் காங்கிரஸ் 32 பிரதிநிதிகளைப் பெற்றுக்கொண்டது.

திருமலை மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிட்டு 18
உறுப்பினர்களையும், கம்பஹா மாவட்டத்தில் மயில் சின்னத்தில்
போட்டியிட்டு ஒருவரையும், களுத்துறை மாவட்டதில் மயில் சின்னத்தில்
போட்டியிட்டு இருவரையும் கட்சி பெற்றுக்கொண்டது.

குருநாகல் மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிட்டு 5
உறுப்பினர்களையும், கண்டி மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிட்டு 8 உறுப்பினர்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்று மிகக்குறுகிய கால அரசியல் வரலாற்றில் அபார வெற்றியை ஈட்டியுள்ளது.

அமைச்சர் றிஷாட் பதியுதீன் மற்றும் பிரதியமைச்சர் அமீர் அலி உட்பட
இன்னும் சில அரசியல் பிரமுகர்களினால் பூச்சியத்திலிருந்து
ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்சி இன்று நாடு முழுவதும் வியாபித்து அகலக்
கால் விரித்து பெரு விருட்சமாக வளர்ந்து வருவதையே உள்ளுராட்சித்
தேர்தல் முடிவுகளும் அக்கட்சி பல சபைகளை தன் வசப்படுத்தியமையும்
எடுத்துக்காட்டுகின்றது.

அமைச்சர் றிஷாட் பதியுதீன் சிங்களப் பேரினவாதத்துக்கும் தமிழ்
பெரும்பான்மை வாதத்துக்கும் இடையே எதிர் நீச்சல் அடித்து இந்தக்
கட்சியை சரியான பாதையில் இட்டுச் செல்வது கண்கூடாகத் தெரிகின்றது.

தேர்தல் காலங்களில் இடம்பெற்ற கழுத்தறுப்புகள், சதி முயற்சிகள்
குழிபறிப்புக்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத வகையிலே
உள்ளுராட்சி சபைகளின் ஆட்சியை அமைத்தலிலும் அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் பல்வேறு
சவலால்களுக்கும் தடைகளுக்கும் முகம்கொடுத்தார்.

பல சபைகளில் மக்கள் காங்கிரஸ் அதிக ஆசனங்களைப் பெற்றிருந்த
போதும் தற்போதைய நடைமுறைத் தேர்தல் முறைகளில் ஏற்பட்ட
குளறுபடிகளால் மக்கள் காங்கிரசை ஆட்சியமைக்கவிடாது தடுக்கும்
நடவடிக்கைகளில் பாரம்பரியத் தமிழ், முஸ்லிம் கட்சிகள் கூட்டுச்சேர்ந்து
பல சதி முயற்சிகளை மேற்கொண்டன.

அகில இலங்கை மக்கள் காங்கிரசை வீழ்த்துதற்கு எடுத்த சதி முயற்சிகளை எல்லாம் இறைவனின் உதவியுடன் அமைச்சர் றிஷாட் பதியுதீன் முறியடித்து பாரம்பரியக் கட்சிகளுக்கும் உதிரிகளுக்கும் பாடம் புகட்டி சபைகளை தன்வசப்படுத்தினார்.

அந்த வகையில் முசலிப் பிரதேச சபையில் மக்கள் காங்சிரசை ஆட்சியமைக்க விடாது அக்கட்சியை வீழத்துவதன் மூலம் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அரசியல் எழுச்சியை கறுவறுக்க முடியுமென மேற்கொண்ட திட்டங்ககள் தவிடு பொடியாக்கப்பட்டன.

அத்துடன் தமிழரசுக் கட்சியின் பாரம்பரியக் கோட்டையான மன்னார்
பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, முல்லைத்தீவு மாந்தை
கிழக்குப் பிரதேச சபை ஆகியவற்றை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியமையும் சகோதர தமிழர்கள் அமைச்ரசர் றிஷாட் பதியுதீன் இருவரை தவிசாளராக்கியமையும் அவரது கடந்த கால சேவைகளுக்கு கிடைத்த பிரதியுபகாரமாகவே கருதப்படுகின்றது. அமைச்சரை ஓர் இனவாதியாக சித்தரித்தோர் இன்று வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றனர்.

அதே போன்று முஸ்லிம் காங்கிரசின் பாரம்பரியக் கோட்டைகளான நிந்தவூர் பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை ஆகியவற்றையும் மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியமை மக்கள் காங்கிரசுக்கு அப் பிரதேசத்தில் கிடைத்த அங்கீகாரத்தையே வெளிப்படுத்துகின்றது.

சுஐப் எம் காசிம்