சுவிட்ஸர்லாந்து பேரூந்து பஸ் விபத்தில் இலங்கையர் 15 பேர் காயம்…

சுவிட்ஸர்லாந்து பேரூந்து பஸ் விபத்தில் இலங்கையர் 15 பேர் காயம்…

சுவிட்ஸர்லாந்தில், சுற்றுலா மேற்கொண்டிருந்த இலங்கையர்கள் பயணித்த பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இலங்கையர்கள் 15 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார், 40 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பேரூந்து, சூரிச்சின் வட பகுதியில், அமைந்துள்ள அதிவேக நெடுஞ்சாலையில், இரண்டு கனரக வாகனங்களுடன் மோதியுள்ளதாக சூரிச் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உள்ளூர் நேரப்படி நேற்று(18) பிற்பகல் 3.15க்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.