நிறைவேற்று ஜனாதிபதி முறைமை குறித்து விவாதம் அவசியமற்றது – ஜே.வி.பி

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை குறித்து விவாதம் அவசியமற்றது – ஜே.வி.பி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் எவருக்கும் விவாதம் நடத்த முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வீ.பி) தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் எதிரான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்..

அரசாங்கம் மக்களது ஆணைக்கு இணங்கி செயற்படுமாக இருந்தால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும்.

ஆனால் அதற்கு 20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் விவாதத்தை நடத்தலாம். இதற்கு ஜேவிபி தயாராக இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.