மாகாண சபைத் தேர்தல் பழைய முறையில் நடாத்தப்படும்…

மாகாண சபைத் தேர்தல் பழைய முறையில் நடாத்தப்படும்…

மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமைக்கு அமையவே நடத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பலப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று(01) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனைவரும் இணைந்து புதிய முறைமையை அறிமுகப்படுத்தியிருந்தாலும், பெரும்பான்மையைப் பெற்ற தரப்பினருக்கு ஆட்சியமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருந்ததாக அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.